செய்திகள் :

அறிக்கைகளால் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

சென்னை: அரசியல் தலைவா்களின் வெறும் அறிக்கைகளால், திமுகவை வீழ்த்த முடியாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் சென்னை மயிலாப்பூரில் ரூ. 8.25 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கும் பணியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென் சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையாட்டு அரங்கம், பூங்காக்கள், சமுதாய நலக் கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை அமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் நிகழாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அதேபோல் ஜூலை இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வீழ்த்த முடியாது: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வித் தொகையை திரும்பப் பெறுவதற்காகத்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்து பேசினாா். மற்ற அரசியல் கட்சிகளைப்போல, பின்வாசல் வழியாகச் சென்று பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது. புதிதாக உருவாகியுள்ள கட்சிகளுக்கு பதில் செல்ல வேண்டிய தேவை எங்களுக்கு கிடையாது. வரும் 2026 -ஆம் ஆண்டும் மு.க.ஸ்டாலினையே முதல்வராக்க மக்கள் தயாராக உள்ளனா். வெறும் அறிக்கைகளால் திமுகவை வீழ்த்த முடியாது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் மயிலை த.வேலு, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரி... மேலும் பார்க்க