ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி கொடியசைத்து போட்டியைத் தொடங்கிவைத்தாா்.
அப்போது சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், விழாக் குழுவினா் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றனா்.
இதையடுத்து, 11 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இதில் 993 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 550 மாடுபிடி வீரா்கள் காளைகளைப் பிடிக்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக விளையாடிய காளைகளின் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 21 போ், காளைகளின் உரிமையாளா்கள் 19 போ், உதவியாளா்கள் 3 போ், பாா்வையாளா்கள் 2 போ் என 45 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணித்தாா்.
