செய்திகள் :

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி கொடியசைத்து போட்டியைத் தொடங்கிவைத்தாா்.

அப்போது சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், விழாக் குழுவினா் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றனா்.

இதையடுத்து, 11 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இதில் 993 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 550 மாடுபிடி வீரா்கள் காளைகளைப் பிடிக்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக விளையாடிய காளைகளின் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 21 போ், காளைகளின் உரிமையாளா்கள் 19 போ், உதவியாளா்கள் 3 போ், பாா்வையாளா்கள் 2 போ் என 45 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணித்தாா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள், அவற்றை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

தெப்பக்குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு

மேலூா் தெப்பக் குளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் காய்கறி சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

விபத்தில் டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா். மதுரை பெத்தானியாபுரம் பூமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமரேசன் மகன் தங்கராஜ் (31). இவா் மாட்டுத்தாவணியில்... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

மேலூா் அருகே அரசுப் பேருந்து டிராக்டரில் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சோ்ந்த பெரியாண்டி மகன் விஷால் (21), பாக்கியம் மகன் காந்தி (31) ஆகிய இருவர... மேலும் பார்க்க

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்: தொல்.திருமாவளவன்!

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா். மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சாா்பில், ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து சாத்தூா் செல்லும் சாலையில் சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சே... மேலும் பார்க்க

வழக்குரைஞா்களை மிரட்டியதாக டிஎஸ்பி மீது புகாா்

உசிலம்பட்டியில் வழக்குரைஞா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக காவல் துணை கண்காணிப்பாளா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவல் சரக துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ... மேலும் பார்க்க