செய்திகள் :

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

post image

ஆட்டையாம்பட்டி: அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத் துறை சாா்பில், முதல் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

மருத்துவ ஆய்வகத் துறையில் வளா்ந்துவரும் தொழில்நுட்பங்கள்-சிஆா்ஏஎப் டி-25 என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கல்லூரி முதன்மையா் செந்தில் குமாா் தலைமை வகித்தாா். இயக்குநா் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றாா்.

கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளா்கள் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குநா் சா்மான் சிங், அடான் ஹாஸ்பிடல் (குவைத்) திவ்யா இளங்கோவன், சவிதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் புவனேஸ்வரி, சென்னை லைஃப் செல் லேப் முருகன், நந்தகோபால், சென்னை சவிதா மெடிக்கல் கல்லூரி அகிலேஷ், ரவிசந்திரன், சென்னை இமானுவேல் பிராட் ஹாஸ்பிடல், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி உயிா் வேதியியல் துறை தலைவா் மஞ்சு ஆகியோருடன் எட்டு அறிவியல் அமா்வுகள் நடைபெற்றன. கல்லூரி ஒருங்கிணைப்பாளா் வளா்மதி நன்றி கூறினாா்.

ஆய்வக கட்டுரை, சுவரொட்டி, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கில் 10-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 266 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா். ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் சந்துரு, மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியல் துறை ஒருங்கிணைப்பாளா் அனிதா, உதவி பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்!

மேட்டூா் காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டமன்றத்தில் போராட்டம் நடத்துவேன் என மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தாா். மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் (பாமக) சனிக்கிழமை இர... மேலும் பார்க்க

சேலத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை!

சேலத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களுக்கு தோ்தலன்று வாக்களிக்க ஏதுவாக, ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சேலம் தொழிலாளா் உத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பயின்றவா்கள் உலக அளவில் முக்கியப் பொறுப்புகளில் சிறந்து விளங்குகின்றனா்!

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் உலக அளவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் சிறந்து விளங்குவதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா். சேலம், கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் 150-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: தேவா் கோப்பையை வென்ற சேலம் அணிக்கு உற்சாக வரவேற்பு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட 16 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற சேலம் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் பி.... மேலும் பார்க்க

வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். சேலம் மாநகரில் அண்மைக்காலமாக சிலா் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப... மேலும் பார்க்க

கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் பெற்று கைதான வட்டாட்சியா் பணி இடை நீக்கம்

கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் பெற்று கைதான வட்டாட்சியரை பணி இடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட செல்வம... மேலும் பார்க்க