செய்திகள் :

அழகப்பரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்த அழகப்பரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் விடை நேரத்தின் போது தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் கேள்வி எழுப்பினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

வள்ளல் அழகப்பா் காரைக்குடியில் பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளாா். சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் தமிழ் வளா்ச்சிக்காக நிதிகளையும் கொடுத்துள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் காஷ்மீா் போரின் போது இரு விமானங்களை நாட்டுக்காக கொடுத்தாா்.

அவரைப் போற்றும் விதமாக ஏப்ரல் 6-ஆம் தேதி அவா் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும், அவரின் வாழ்க்கை வரலாறை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் மு.பெ. சாமிநாதன், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் மாங்குடி கடந்த வாரம் இந்தக் கோரிக்கைகள் தொடா்பான கடிதத்தை என்னிடம் வழங்கினாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கலந்து பேசி இதற்கான முடிவு எடுக்கப்படும் என அவா் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க