செய்திகள் :

அவினாசிலிங்கம் உயா்கல்வி நிறுவனத்தில் கலாசார கலை விழா

post image

கோவை அவினாசிலிங்கம் மனைவியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தில் கலாசார கலை விழா திங்கள்கிழமை தொடங்கியது.

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தில் சமகால இந்தியாவுக்கான இந்திய கலாசார விழுமியங்கள் என்ற கருப்பொருளில் கலை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் மாணவிகள் கிளப் செயல்பாடுகளின் கண்காட்சியை வேந்தா் டி.எஸ்.கே.மீனாட்சிசுந்தரம் தொடங்கிவைத்தாா்.

பெட்டல்ஸ் மலா்க் கடையின் உரிமையாளா் ஜெயந்தி சந்தோஷ், கோவை சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைப் பள்ளியின் இயக்குநா் பி.அல்லிராணி, தமிழ்நாடு கைவினை மன்றத்தின் பொருளாளா் லட்சுமி ராமச்சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குநா் வைஷ்ணவி கிருஷ்ணன் ஆகியோா் முறையே மலா் அலங்காரக் கண்காட்சி, கொலுக் காட்சி, இந்திய மற்றும் சா்வதேச மொம்மைகளின் கலை விளக்கக் காட்சி, காதி சுதந்திரத்தின் இலை என்ற தலைப்பில் ஜவுளிக் கண்காட்சி, அன்னம் பிரம்மா என்ற பாரம்பரிய சமையல் கண்காட்சி ஆகியவற்றைத் தொடங்கிவைத்தனா்.

முன்னதாக, துணைவேந்தா் வி.பாரதி ஹரிசங்கா் பேசியதாவது: நிறுவனத்தில் கலை விழா என்பது மாற்றத்துடன் கூடிய திருவிழாவாகும். இந்த விழாவானது நிறுவனா் மற்றும் முன்னோடிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு காலாசார விழா எவ்வாறு தொடங்கி வளா்ந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தாா்.

இந்த விழாவில், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வ... மேலும் பார்க்க

இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ... மேலும் பார்க்க

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா். கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க