செய்திகள் :

ஆசியக் கோப்பை தொடரில் ரீ-எண்ட்ரி.! மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயஸ்!

post image

ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவுள்ளதாக பிசிசிஐயில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இருந்து கலட்டிவிடப்பார். அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி இருந்தார்.

அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தினார். மேலும், கொல்கத்தா அணியில் இருந்து விலகி நிகழாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி அவரை ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல்லிலும் அதிரடியைத் தொடர்ந்த ஷ்ரேயஸ், 604 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார்.

அதுமட்டுமின்றி அவர் சையத் முஸ்டாக் அலி, ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை என அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் அசத்தினார். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் கலட்டிவிடப்பட்டு, அதற்கு முழுமையான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதன்பின் இந்திய டெஸ்ட் அணியிலும் ஷ்ரேயஸ் ஐயரை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் மறுத்து வந்தது.

ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான், சாம்பியன் டிராபியில் தேர்வு செய்யப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர், 5 போட்டிகளில் அதிரடியாக விளையாடி 243 ரன்கள் குவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரிலும், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ-யின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10 முதல் 14 வரை தில்லியின் அருண் ஜேட்லி மைதானத்திலும் நடைபெறுகிறது.

Shreyas Iyer Likely To Be Picked For Asia Cup 2025 & West Indies Tests

இதையும் படிக்க :இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

அறிமுக வீரர் அசத்தல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் ... மேலும் பார்க்க

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளரிடம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நடந்து கொண்ட விதம் சரியா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.இந்தியா மற்... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவை 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்ற... மேலும் பார்க்க

பெங்களூரில் ரூ.1,650 கோடி செலவில் புதிய கிரிக்கெட் திடல்..! 80,000 இருக்கைகள்!

கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார். கர்நாடக வீட்டுவசதி வாரியம் அளித்த முன்மொழிவை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டுள்ளார். அதில், மாந... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் களமிறங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் நம்.3இல் களமிறங்கி, ... மேலும் பார்க்க