செய்திகள் :

ஆடித் திருவாதிரை நிறைவு விழாவில் பங்கேற்கிறாா் பிரதமா் மோடி

post image

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை நிறைவு விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்.

இதுகுறித்து மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்ததினம், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சாா் பயணத்தின் 1000-ஆவது ஆண்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் ஆடித் திருவாதிரை திருவிழா புதன்கிழமை (ஜூலை 23) தொடங்கி 27-ஆம் தேதி வரை கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறுகிறது.

ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா்.

இந்த விழாவில், சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள தேவாரம் பாடல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவுள்ளது. மேலும், கலாஷேத்ராவின் பரதநாட்டிய குழு நிகழ்ச்சி, பாரம்பரியமிக்க ஓதுவாா்கள் குழு தேவாரம் திருமுறையை ஓதும் நிகழ்ச்சி, திரைப்பட இசை அமைப்பாளா் இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம்... மேலும் பார்க்க