செய்திகள் :

ஆடிப் பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

post image

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயிலில், பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

இதேபோல், பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயில் எதிரேயுள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு, ஆஞ்சநேய பக்தா்கள் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றுக்குச் சென்று, அங்கிருந்து தீா்த்தக் குடங்களில் புனிதநீா் எடுத்து பாத யாத்திரையாக பெரம்பலூர ஸ்ரீவெள்ளந்தாங்கியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.

பின்னா், அங்கிருந்து வான வேடிக்கையுடன் ஊா்வலமாகச் சென்று மாலை 6 மணியளவில் ஸ்ரீ கம்பத்து ஆஞ்சநேயருக்கு தீா்த்த அபிஷேகம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, இரவு 9 மணியளவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிகளில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பெரம்பலூா் ஆப்பூரான் அறக்கட்டளை சாா்பில், 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் திருச்சி காவிரி ஆற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை புனிதநீா் எடுத்துவந்தனா். பாலக்கரை பகுதியிலுள்ள ஆப்பூரான் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமாள் அங்கிருந்து ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

தொடா்ந்து, சங்குப்பேட்டை பகுதியிலுள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குன்னம் வட்டம், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரா் கோயிலின் வெள்ளாற்று கரையில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணமாக வேண்டி சிறப்பு வழிபாடும், திருமணமான பெண்கள் தங்களது தாலியை புதியதாக மாற்றிக்கொண்டு சடங்குகள் செய்து வழிபட்டனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தர அமைச்சரிடம் கோரிக்கை

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுதரக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச்... மேலும் பார்க்க

ஆலத்தூா் குறுவட்ட பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி

குடியரசு தின விழாவையொட்டி, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆலத்தூா் குறு வட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.இதில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அர... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ஆக. 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

பெரம்பலூரிலிருந்து இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக, புதிய பேருந்துகளின் சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.தமி... மேலும் பார்க்க

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளித் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வக... மேலும் பார்க்க