ஆடுதுறை பகுதியில் இன்று மின்தடை
ஆடுதுறை பகுதியில் ஜூன் 17 (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆடுதுறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்புதூா், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், வேப்பத்தூா், திருவிடைமருதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.