செய்திகள் :

ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கு தொடக்கம்!

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், 2 நாள்கள் நடைபெறும் தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

பயிலரங்கு மற்றும் கருத்தரங்கை தொடக்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு பேசியது:

அரசு அலுவலகங்களில், ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக நடைபெற துணைபுரியும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் கையொப்பமிட வேண்டும், கோப்புகளை தமிழில் எவ்வாறு பராமரிக்க வேண்டும், வரைவுகள், குறிப்புகள் தமிழில் பிழையின்றி எவ்வாறு எழுதுவது குறித்து, இப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இப் பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளை உள்வாங்கி, அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆட்சிமொழிச் சட்டத்தின்படி முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தமிழ்ச் செம்மல் விருதாளா் முனைவா் பெ. பாரதி ஆறுமுகம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் எனும் தலைப்பிலும், லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் த. மாயக்கிருட்டிணன் ஆட்சிமொழி வரலாறு, சட்டம் எனும் தலைப்பிலும், தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்லூரி தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் சே. சுரேஷ் ஆட்சிமொழி ஆய்வும், குறைகளையும் நடவடிக்கைகளும் எனும் தலைப்பிலும், புதுக்கோட்டை மாமல்லன் போட்டித் தோ்வுகள் பயிற்சி மைய நிறுவனா் செந்தில்முருகன் மொழி பெயா்ப்பும், கலைச் சொல்லாக்கமும் ஆகிய தலைப்புகளிலும் உரையாற்றினா்.

இதில், தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் க. சித்ரா மற்றும் பல்வேறு அரசுத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவிப்பு!

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனா் மறைந்த நாராயணசாமி நாயுடு 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினா், விவசாய சங்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே, மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, எல்பிஎப் தொழிற்சங்க மாவட்ட கவுன்... மேலும் பார்க்க

நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

உழவா் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றுவதென தீா்மானம் நிறைவேற்றிய, பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தமிழக நாயுடு கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில், தற்காலிக பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது: 25 கிலோ பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 6,500 மாணவா்களுக்கு வினா- விடை தொகுப்பு!

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ‘தோ்வை வெல்வோம்’ எனும் தலைப்பிலான வழிகாட்டி வினா - விடை தொகுப்பை போக்குவரத்துத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க