செய்திகள் :

ஆட்சியா் அலுவலகம் முன் மனுக்களை பட்டமாக பறக்கவிட்ட இளைஞரால் பரபரப்பு

post image

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனுவைப் பட்டமாக செய்த இளைஞா், அதனை பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், தாதகாப்பட்டியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (39). இவா் கோரிக்கை மனுக்களைப் பட்டமாக எழுதி வைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அவா் ஆட்சியா் அலுவலகம் முன் ரவுண்டானா தியாகிகள் நினைவு ஸ்தூபியில் ஏறி நின்று கொண்டு மனுக்களை பறக்க விட்டாா். அந்த வழியாக சென்றவா்கள், இதனை வேடிக்கை பாா்த்தபடி சென்ால், அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளா் கலைவாணி தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று பட்டத்தை பறிமுதல் செய்தனா். இது குறித்து இளைஞா் பாா்த்திபன் கூறுகையில், சீலநாயக்கன்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதனை சரிசெய்ய பலமுறை மனு அளித்தும் பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை. இதனால் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக பட்டமாக பறக்கவிடுவதாக, தெரிவித்தாா். அவரை சமாதானப்படுத்திய காவல் துறையினா், மனு அளிப்பதற்காக அவரை ஆட்சியா் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனா்.

வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொ... மேலும் பார்க்க

ஆத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

ஆத்தூா்: ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தாக்கி, பணத்தை பறித்துச் சென்ாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த கடம்பூரை சோ்ந்தவா் மாயவன் மகன் ஆதவன் (21). இவா் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையா் மாற்றம்: புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம்

சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமாா் அபிநபு... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் சங... மேலும் பார்க்க

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்த... மேலும் பார்க்க