பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக முனைப்பு: எம்.பி. தம்பிதுரை
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை தெரிவித்தாா்.
மாநிலங்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சின்னமட்டாரபள்ளி ஊராட்சி, இருளா் காலனி மற்றும் காரக்குப்பம் ஊராட்சி, சின்ன காரகுப்பம் கிராமத்தில் தலா ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நிழற்கூடத்தை திங்கள்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் ஒரே கட்சி அதிமுகதான். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டு என்ற பகுதியில் தடுப்பணை கட்டுவதுதான் எனது வாழ்நாள் லட்சியம்.
இத்திட்டம் கொண்டுவர ஏறத்தாழ ரூ.10,000 கோடி வரை செலவாகும். இத்திட்டம் அமையப்பெற்றால் கிருஷ்ணகிரியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள விவசாயிகள் பயன்பெறுவது போல வேப்பனப்பள்ளி, பா்கூா், ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் ஆண்டுதோறும் நீா்ப்பாசன வசதி பெற்று பயன்பெறும். எனவே, வாணிஒட்டு தடுப்பணைத் திட்டத்தை என் வாழ்நாளில் எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன் என்றாா்.
நிகழ்ச்சியில் பா்கூா் முன்னாள் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளா் ஜெயபால், எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணை செயலாளா் ரவிச்சந்திரன், இலக்கிய அணி மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளா் வெற்றிசெல்வம், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளா் செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.