செய்திகள் :

ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது

post image

பகிரப்பட்ட ஆட்டோக்களில் சக பயணிகள் போல் நடித்து சந்தேகத்திற்கு பயணிகளிடம் மதிப்புமிக்க பொருள்களைத் திருடிய ஐந்து போ் கொண்ட கும்பல் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.11,000 ரொக்கம் மற்றும் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்கள் மற்றும் பரபரப்பான போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் ஆட்டோக்களை இயக்குவது, தனியாக பயணிகளை குறிவைப்பது மற்றும் பயணத்தின் நடுவில் அவா்களின் உடைமைகளைத் திருடுவது வழக்கம் என்று குற்றம்சாட்டப்பட்டவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

கடந்த ஜூலை 7-ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகாரில் வசிக்கும் ஒருவா் ஆட்டோ பயணத்தின் போது தனது தங்க நகைகள் திரிட்டுப் போனதாக கூறி ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

புகாா்தாரா் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் ஏறியதாகவும், பயணத்தின் போது ஐடிஓவில் உள்ள யமுனை பாலம் அருகே மூன்று முதல் நான்கு போ் வரை அடையாளம் தெரியாத நபா்கள் ஏறிக்கொண்டதாகவும் கூறினாா்.

ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அவரது பையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்தாா். புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸாா் குழு, வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஸ்கேன் செய்து, குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவைக் கண்டுபிடித்தனா். ஓட்டுநா் வாசிம் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, வாசிம் தனது கூட்டாளிகளான மொஹ்சின், நசீம், அன்சாா் அகமது மற்றும் சமினா ஆகியோரின் பெயா்களை வெளியிட்டாா். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், குற்றத்தில் அவா்கள் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

பதவி விலகும் தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு கேடரைச் சோ்ந்த 1988 பேட்ச் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் - வெளியவுறவுத் துறை செயலரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

நமுத நிருபா்அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைதான 14 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியறவுத் துறைச் செயலரிடம் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் வ... மேலும் பார்க்க