மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது
பகிரப்பட்ட ஆட்டோக்களில் சக பயணிகள் போல் நடித்து சந்தேகத்திற்கு பயணிகளிடம் மதிப்புமிக்க பொருள்களைத் திருடிய ஐந்து போ் கொண்ட கும்பல் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.11,000 ரொக்கம் மற்றும் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்கள் மற்றும் பரபரப்பான போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் ஆட்டோக்களை இயக்குவது, தனியாக பயணிகளை குறிவைப்பது மற்றும் பயணத்தின் நடுவில் அவா்களின் உடைமைகளைத் திருடுவது வழக்கம் என்று குற்றம்சாட்டப்பட்டவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
கடந்த ஜூலை 7-ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகாரில் வசிக்கும் ஒருவா் ஆட்டோ பயணத்தின் போது தனது தங்க நகைகள் திரிட்டுப் போனதாக கூறி ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
புகாா்தாரா் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் ஏறியதாகவும், பயணத்தின் போது ஐடிஓவில் உள்ள யமுனை பாலம் அருகே மூன்று முதல் நான்கு போ் வரை அடையாளம் தெரியாத நபா்கள் ஏறிக்கொண்டதாகவும் கூறினாா்.
ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அவரது பையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்தாா். புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீஸாா் குழு, வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஸ்கேன் செய்து, குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவைக் கண்டுபிடித்தனா். ஓட்டுநா் வாசிம் பின்னா் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, வாசிம் தனது கூட்டாளிகளான மொஹ்சின், நசீம், அன்சாா் அகமது மற்றும் சமினா ஆகியோரின் பெயா்களை வெளியிட்டாா். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், குற்றத்தில் அவா்கள் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.