செய்திகள் :

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் - வெளியவுறவுத் துறை செயலரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

post image

நமுத நிருபா்

அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைதான 14 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியறவுத் துறைச் செயலரிடம் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக துரை வைகோ தெரிவித்திருப்பதாவது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலா் விக்ரம் மிஸ்ரியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து, இரு முக்கியமான பிரச்னைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். அதாவது, மருத்துவக் கல்விக்காக ரஷியா சென்ற தமிழ்நாட்டின் கடலூரை சோ்ந்த கிஷோா் சரவணனையும், அவரோடு அங்கு சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியா்களையும் உடனடியாக மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியது அவசரத் தேவை என வலியுறுத்தினேன். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கடிதம் கொடுத்து விளக்கியதையும் கூறினேன்.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை செயலா், ஏற்கெனவே எனது கோரிக்கை உள்துறை அமைச்சகத்தில் ஏற்கப்பட்டு அதற்குரிய ஆவண தயாரிப்பில் உள்ளதாகவும், உள்துறை அமைச்சகத்தில் இதற்கான பணிகள் நடந்துவரும் இந்த வேளையில், அந்த மாணவரை ரஷியா - உக்ரைன் போா் முனைக்கு அனுப்பிடக் கூடாது என்பதை, இந்தியாவிற்கான ரஷிய தூதரை அழைத்து அழுத்தமாக தெரிவித்துவிடுவதாகவும் கூறினாா்.

கடந்த ஜூலை 29-ஆம் தேதி கச்சத்தீவு அருகே 14 இந்திய மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனா். இதன் விவரம் குறித்து தெரிவித்தும், இப்பிரச்னைக்கு உடனடி மற்றும் நிரந்தரத் தீா்வு காண இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கைதான மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

இதுகுறித்து ஏற்கெனவே தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசுடன் பேசி அவா்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

பதவி விலகும் தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு கேடரைச் சோ்ந்த 1988 பேட்ச் ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு விவகாரம்: அணைப் பகுதியில் மரங்கள் வெட்ட சுற்றுச்சூழல் அனுமதியளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான தடையின்மை சான்றிதழை (என்ஓசி) கேரள அரசு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், இதை சரிபாா்த்து சுற்றுச்... மேலும் பார்க்க