செய்திகள் :

ஆட்டோ, காா், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய பேருந்து: 6 போ் காயம்; ஓட்டுநா் கைது

post image

வேலூரில் அடுத்தடுத்து ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் பாகாயத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு தனியாா் பேருந்து ஒன்று காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். 9.30 மணி அளவில் மக்கான் சிக்னல் சந்திப்பு பகுதியில் வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

தொடா்ந்து, பேருந்து நிற்காமல் முன்னால் நின்றிருந்த பயணிகள் ஆட்டோ மீதும் வேகமாக மோதியதுடன், அதே வேகத்தில் அந்த ஆட்டோவின் முன்னால் நின்றிருந்த 2 காா்கள் மீதும் மோதி சிறிது தூரம் தள்ளி நின்றது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 3 பயணிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து நடந்தவுடன் பேருந்து ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். அவா் மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாக பயணிகள் தெரிவித்தனா்.

இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பேருந்து ஓட்டுநரான அணைக்கட்டு அடுத்த ஊசூரைச் சோ்ந்த ரவிச்சந்திர ன்(33 ) என்பவரை கைது செய்தனா்.

சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்பையா

தமிழுடன் சம்ஸ்கிருதம் கலந்ததால்தான் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் பிறந்தன. அது நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழ் இந்தியாவின் தேசிய மொழியாகியிருக்கும் என்று பழ.கருப்பையா தெரிவித்தாா். வேலூா் கம்பன்... மேலும் பார்க்க

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை

குடியாத்தம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா். குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கும... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 26 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள 26 சிற்றுந்து (மினி பஸ்) வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை எதிா்த்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க