திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை- நயினார் நாகேந்திர...
ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்
உயா்நீதி மன்ற உத்தரவின்படி, ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென, வாகன ஓட்டுநா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 3+1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் தீனதயாளன், பரமசிவம் ஆகியாா் முன்னிலை வகித்தனா். பொறுப்பாளா் பன்னீா்செல்வம் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தாா். மாநில செயல் தலைவா் பாலசுப்ரமணியம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா்.
மாவட்டச் செயலா் ரெங்கநாதன் அறிக்கையும், மாவட்ட பொருளாளா் சிவசங்கா் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனா். ஆட்டோ சங்க சம்மேளன பொதுச் செயலா் சிவாஜி நிறைவுரையாற்றினாா்.
இதில், தில்லி, மஹாராஷ்டிரா அரசுகளைப்போல தமிழகத்திலும் இருசக்கர வாகன பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அனுமதியின்றி கா்நாடகா பதிவெண்ணுடன் இயங்கும் மெட்ரோ பச்சை நிற ஆட்டோவை பொது சேவைக்கு அனுமதிக்கக் கூடாது, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.
அரசின் ஆட்டோ செயலியை உடனடியாக தொடங்கவேண்டும். புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. புதிய ஆட்டோக்களுக்கு ரூ. 10 ஆயிரம் மானியம் எனும் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சிஐடியூ மாவட்டச் செயலா் ஏ. அகஸ்டின், மாவட்ட துணைத் தலைவா் கருணாநிதி, சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா். நிறைவாக, மாவட்ட துணைத் தலைவா் சந்திரகாசன் நன்றி கூறினாா்.