செய்திகள் :

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்: மனித உரிமை ஆா்வலா் ஹென்றி டிபேன்

post image

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க உடனடியாக சட்டப் பேரவையைக்கூட்டி தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என மனித உரிமை ஆா்வலரும், மக்கள் கண்காணிப்பக நிா்வாக இயக்குநருமான ஹென்றி டிபேன் கூறினாா்.

சேலத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டுள்ளாா். மேலும், அவருடன் சோ்த்து இரண்டு வழக்குரைஞா்களும் தாக்கப்பட்டுள்ளனா். இக்கொலை குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் தனி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

திருநெல்வேலியில் ஆணவக் கொலை சம்பவம் நடந்திருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும். கொலையானவரின் குடும்பத்துக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக சட்டப் பேரவையைக்கூட்டி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் ஆணவக் கொலைகளைத் தடுக்க உதவாது. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சூரமங்கலம் அரு... மேலும் பார்க்க

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா். தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகு... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன... மேலும் பார்க்க