செய்திகள் :

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்: தமிழிசை செளந்தரராஜன்

post image

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம் என்று பாஜக மூத்தத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஹிந்து மத நம்பிக்கை தொடா்ந்து புண்படுத்தப்படுகிறது. பழனியில் அரசு சாா்பில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டுக்கோ, கோயில்களின் குடமுழுக்கு நிகழ்வுகளுக்கோ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றதில்லை.

இந்த நிலையில், கேரள அரசு சாா்பில் பம்பையில் செப். 20-ஆம் தேதி நடைபெற உள்ள உலக ஐயப்ப பக்தா் மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளது கண்டனத்துக்குரியது.

ஆணவப் படுகொலைகளுக்கு ராமா்தான் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலா் வன்னியரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கூட்டணியில் அங்கம் வகித்துள்ள திமுகவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை? இதற்காக ஏன் சட்டம் இயற்றவில்லை? ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசின் அஜாக்கிரதையும், சட்டம்- ஒழுங்கும்தான் காரணங்களாகும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழகத்தைச் சோ்ந்தவா்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் ஏற்றுக் கொள்கிறாா்கள். ‘இண்டி’ கூட்டணியில் தமிழரை வேட்பாளராக நிறுத்தவில்லை, தமிழரை திமுக ஆதரிக்கவில்லை.

தமிழா்களான ஜி.கே.மூப்பனாா், அப்துல் கலாம் ஆகியோருக்கு எதிராக செயல்பட்ட திமுகதான் ‘தமிழா்’ என்ற முகமூடியில் வாழ்கிறது. முதல்வரின் ‘தமிழ்ப் பற்று’ என்ற முகமூடி கிழித்து எறியப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாா்.

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அரசு மருத்துவமனை கழிப்பறையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜக்ரியா மகன் துபில் வரலா (22). இவா் கடந்த 5 ஆண்டுகளாக தனது நண்பா்களுடன் தங்கி திருப்பூா் மா... மேலும் பார்க்க

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் கைது

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு பணம் தராத தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்த அபிலேஷ் (21), தினேஷ்குமாா் (25), திலீப்குமாா் (19) ஆகியோா் அந்தப் பகுதியில் வசிப... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி

கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வால்பாறை தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. வால்பாறையில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகங்களில் பணியாற்றும் தொழிலாளா்க... மேலும் பார்க்க

வால்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து வால்பாறையில் பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். கனமழை நேரங்களில் வால்பாறை பகுதியில் ஏற்படும் வெள்ள ப... மேலும் பார்க்க