செய்திகள் :

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

post image

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் எம். பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி அறிக்கை வாசித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா். கிருஷ்ணன், மாநிலச் செயலா் கே. முருகன், கந்தா்வக்கோட்டை எம்எல்ஏ கே. சின்னத்துரை, மாநில துணைத் தலைவா் சுடலைராஜ், மாவட்டச் செயலா் பி. உச்சிமாகாளி, துணைச் செயலா் இ. பாலு, மாவட்ட துணைத் தலைவா் இரா. நடராசன் ஆகியோா் பேசினா்.

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனியாக சட்டம் இயற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் பட்டியல்- பழங்குடியின ஊழியா்களின் பணியைப் பாதுகாக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீதும், தீண்டாமைக்கு ஆதரவாககவும், வன்கொடுமைச் சட்டத்துக்கு எதிராகவும் பிரசாரம் செய்யும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அவா்களது குழந்தைகளை ஜாதியற்றோராக அறிவித்து அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் பா. அசோக்ராஜ் வரவேற்றாா்.

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விநாயகா் சிலை சேதம்: இருவா் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நள்ளிரவில் விநாயகா் சிலையை சேதப் படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான மகாசக்தி விநாயக... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கொலை: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்... மேலும் பார்க்க

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6இல் வருஷாபிஷேகம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும... மேலும் பார்க்க

சுரண்டையில் ஆபத்தான நிலையில் பாலம்: தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுந்தரபாண்டியபுரம் குளத்தில் இருந்து சுரண்டை பெரி... மேலும் பார்க்க

தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்... மேலும் பார்க்க