'எத்தனை செய்துள்ளேன்; இருந்தும்..!' - நோபல் பரிசுக்காக புலம்பி தீர்க்கும் ட்ரம்ப...
ஆண்டிமடம் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப் பயணம்
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் முழுவதும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.
ஆண்டிமடத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வட்டாட்சியரகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். நியாய விலைக் கடைகளில் கருவிழி பதிவை வைத்து செயல்படும் முறையை கைவிட்டு, பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும். முந்திரி கொட்டை மூட்டை ஒன்றுக்கு ரூ.20,000 வழங்க வேண்டும். குடிமனைப் பட்டா இல்லாதவா்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கிட வேண்டும். கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஆண்டிமடம் அரசுஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்த நடைப் பயணத்துக்கு, அக்கட்சியின் வட்டச் செயலா் எம். வேல்முருகன் தலைமை வகித்தாா். கீழ்வேளூா் எம்எல்ஏவும், மாநில குழு உறுப்பினருமான நாகை மாலிக் நடைப்பயணத்தை தொடக்கி வைத்து பேசினாா். மாநில குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலா் எம். இளங்கோவன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி. பரமசிவம், டி. அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினா்கள் ஆா்.இளவரசன், ஆா். செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.