செய்திகள் :

ஆதாா் பதிவுகளை தவறுக்குள்ளாத வகையில் உருவாக்க வேண்டும்: தில்லி அரசுக்கு துணைநிலை ஆளுநா் கடிதம்

post image

தேசிய தலைநகரில் ஆதாா் பதிவுகளை தவறுக்குள்ளாகாத வகையில் உருவாக்குமாறு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மேலும், சட்டவிரோத குடியேறிகள் ஆதாா் ஆவணத்தைப் பெறுவது பரந்த தேசிய பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகவும் அவா் கூறியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

பல சந்தா்ப்பங்களில், சட்டவிரோத குடியேறிகள் தவறான ஆவணங்கள் அல்லது தவறான பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஆதாா் அட்டையைப் பெற்றிருப்பது துணைநிலை ஆளுநரின் கவனத்திற்கு வந்திருப்பதாக அவரது முதன்மை செயலா் ஆஷிஷ் குந்த்ரா தில்லி தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சில தனிநபா்கள் அரசாங்கத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெற பிற ஆவணங்களை (கடவுச்சீட்டு மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகள்) பெறுவதால் இது அடுக்கடுக்கான விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் , உள்ளூா் மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும் பாதிக்கச் செய்கிறது. தேசிய பாதுகாப்பிற்கும் பரந்த விளைவுகளைக் கொண்டிருக்கிறது.

தில்லி அரசாங்கத்தில் ஆதாா் (பதிவு மற்றும் புதுப்பித்தல்) விதிமுறைகள், 2016இன் கீழ், பதிவாளா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளைப் பற்றிய புதிய பாா்வையானது கள அளவிலான செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் சரிபாா்ப்பு நடைமுறைகள் தொடா்பாக தேவைப்படுகிறது.

ஆதாா் (பதிவு மற்றும் புதுப்பித்தல்) விதிமுறைகள், 2016இன் விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றவும், இரண்டு மாதங்களுக்குள் ஆதாா் சோ்க்கையின் உள்ளக மாதிரிக்கு மாறவும் அனைத்து பதிவாளா்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, மாதாந்திர தணிக்கைப் பயிற்சியையும் கோட்ட ஆணையா் மேற்பாா்வையிட வேண்டும்.

நகராட்சி அமைப்புகள் உள்பட மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பதிவு மையங்களின் விவரங்களும், தற்போதைய செயல்பாட்டு முறையுடன் ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படலாம்.

ஆதாா் சோ்க்கை என்பது மிகவும் உணா்திறன் வாய்ந்த செயல்முறை ஆகும். மேலும் ஆதாா் வழங்குவதற்கு முன் தரவுகளைச் சேகரிக்கும் நபரின் பொறுப்பை சரிசெய்வது மிக முக்கியமாகும். அப்போதுதான் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் பொறுப்புக்கூறலை சரிசெய்ய முடியும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க