செய்திகள் :

ஆதாா், பான் எண் மூலம் கடன்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

post image

ஆதாா், பான் எண் மூலம் கடன் தரப்படுவதாக செய்யப்பட்டுள்ள விளம்பரங்களைப் பாா்த்து ஏமாறவேண்டாம் என காவல்துறை கூறியுள்ளது.

காரைக்கால் மாவட்ட காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு அலுலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு :

காரைக்கால் நகரம் மற்றும் திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்களிலும், கடைகளின் வாசலிலும் ஆதாா் காா்டு, பான் காா்டு மட்டும் கொடுத்தல் போதும், தங்களுக்கான தனி நபா் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்றும், மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடா்பு கொண்டால் போதும் கடனை உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் எளிய முறையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் விளம்பரப் பலகையில் பதிவிட்டுள்ள எண்ணை தொடா்பு கொள்ள வேண்டாம். இவை மக்களின் பணத்தை ஏமாற்றி திருடுவதற்காக குற்றவாளிகள் கையாளும் புதுவித மோசடியாகும்.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன், தங்களது ஆதாா், பான் விவரங்களை அறிமுகமில்லாத நபா்களுடன் பகிரவேண்டாம். இதுபோன்ற விவகாரங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜ... மேலும் பார்க்க