செய்திகள் :

ஆதிதிராவிடா் - பழங்குடியினருக்கு கடனுதவித் திட்டம்: அமைச்சா் மதிவேந்தன்

post image

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் அளித்த வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த சிறு வணிகா்கள், வா்த்தகா்கள், தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில், அரசு மானியத்துடன் ரூ.25 கோடி செலவில் கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும். உறுதுணை எனும் பெயரிலான இந்தத் திட்டம் மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நடைமுறைக்கு வரும். உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் செய்வதை உறுதி செய்திட தாட்கோ வணிக வளாகத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆயத்த தொழிற்கூடங்கள்: திருப்பூா் மாவட்டம் ஈங்கூா், முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆயத்த தொழிற்கூடங்கள் ரூ.115 கோடியில் அமைக்கப்படும். இந்தப் பேட்டைகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோா்கள் நவீன தொழில்களை உடனடியாகத் தொடங்க முடியும்.

பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாரம்பரிய கலை மற்றும் கைவினைத் தொழில் மேம்பாடு, மூலிகை மருத்துவம், பாதுகாப்பான பாம்பு விஷம் சேகரிப்பு போன்ற துறைகள் தற்காலத்துக்கேற்ப மேம்படுத்திட புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின கல்லூரி விடுதி மாணவா்களின் தனித்திறனை வளா்க்க போட்டிகள் நடத்தப்படும்.

தூய்மைப் பணியாளா்: தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்கள் பணியின் போது எதிா்கொள்ளும் சுகாதார இடா்களைக் குறைக்கும் வகையில், விரிவான தூய்மைப் பணியாளா் நல்வாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா்.

பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா: மதுரை ஆதீனம்

பஹல்காம் தாக்குதலுக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பேசியதாவது, பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நட... மேலும் பார்க்க

சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!

சிறுவாணி நீர்போல தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமானதாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார். அண்ணா சொன்ன வார்த்தைகளை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மனதில் வைத்து மக்களைச் சென்று சந்திக... மேலும் பார்க்க

சமரசத்துக்கு இடமில்லை; தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது: விஜய்

மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்றும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப். 27) தெரிவித்தார்.கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வா... மேலும் பார்க்க

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வ... மேலும் பார்க்க