செய்திகள் :

ஆதி சங்கரா் ஜெயந்தி விழா: உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை

post image

பழனி அருகேயுள்ள அ.கலையமுத்தூரில் ஆதி சங்கரா் ஜெயந்தியையொட்டி, உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் வெள்ளிக்கிழமை ஆதி சங்கரரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ருத்ர ஜெபமும், சிறப்பு யாக பூஜைகளும் நடைபெற்றன. அக்ரஹாரம் சீதாராம பஜனை மண்டபத்தில் நடைபெற்ற இந்த பூஜையின் போது, உலகநலன் வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை தொடங்கி புண்யாஹவாசனம், ஆவஹந்தி ஹோமம், ருத்ரஹோமம், வசூா்தாரா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. யாகபூஜையில் திரளானோா் பங்கேற்று வேதபாராயணம் செய்ய வசூா்தாரா ஹோமம் வளா்க்கப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது.

பிரதானமாக கலசங்களில் புனிதநீா் நிரப்பப்பட்டு அவற்றுக்கு வேதவிற்பன்னா்கள் தீபாராதனை செய்தனா். பின்னா், கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலையில் ஐம்பொன்னாலான ஆதிசங்கரரின் உருவச் சிலைக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா் ஆகிய பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் ஆதிசங்கரா் உருவச் சிலை வீதி உலா நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நாகராஜ் (38). விவச... மேலும் பார்க்க

சூறைக்காற்றில் வாழைகள் சேதம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி, வெரியப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை: வா்த்தகா்களுடன் ஆலோசனை

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆணையா் ம.... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவராக அளித்த வாக்குறுதிகளை முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாா்!

எதிா்க்கட்சித் தலைவராக அரசு ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என அகில இந்திய தொடக்கக் கல்வி ஆசிரியா் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) செயலா் அண்ணாமல... மேலும் பார்க்க

நம்பிக்கையுடன் படித்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி சாத்தியம்: ஆட்சியா்

கல்வி நிறுவனங்கள் நடத்தும் தோ்வைப் போல இல்லாமல், போட்டித் தோ்வுகளுக்கு முழு நம்பிக்கையுடன் படிப்பவா்களுக்கு வெற்றி சாத்தியமாகும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் கோட்டாட்சியா் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தவெக தலைவர் விஜய்!

கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் சென்ற வாகனமும் சிக்கியது. அவருக்கு பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலா்கள் மரத்தை அக... மேலும் பார்க்க