செய்திகள் :

ஆத்தூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

post image

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பகுதியில் இருபது நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்வதைக் கண்டித்து அதிமுக நகா்மன்ற குழுத் தலைவா் உமாசங்கரி மோகன் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அதிமுக வா்த்தகா் அணி இணைச் செயலாளரும் நகா்மன்ற உறுப்பினருமான ஏ.கே.டி. வரதராஜன் வரவேற்றுப் பேசினாா். நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மணி, நகர மகளிரணி இணைச்செயலாளா் கலைச்செல்வி பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், ஆத்தூா் சட்டப்ரேவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், நகரச் செயலாளா் அ.மோகன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

ஆத்தூா் நகராட்சி பகுதி மக்களுக்கு 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்குவதாக நகராட்சியை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் காலி குடங்களுடன் கலந்துகொண்டனா். மேட்டூா் அணை 5 ஆவது முறையாக நிரம்பியும் 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்வதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ.நல்லதம்பி (கெங்கவல்லி), மாவட்ட பிரதிநிதி பி.டி. தியாகராஜன், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் வீனஸ் அ.சண்முகசுந்தரம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல்பாஷா, ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளா் ஜி.முரளிசாமி, பாஜக நகரத் தலைவா் சபரிராஜன், தமாகா மாநில பொதுச் செயலாளா் சத்யா சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி அருகே மதுபோதையில் காவலரை தாக்கிய தொழிலாளி கைது

வாழப்பாடி: வாழப்பாடி அருகே மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாஸ்கா் (40). இவருக்கும், இவரது சகோதரிகளுக... மேலும் பார்க்க

தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு வழிபாடு திங்கள்கிழமை இரவு தொடங்கியது.நவராத்திரியையொட்டி தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் திருமண மண்டபத்தில் ப... மேலும் பார்க்க

இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாததால் பரபரப்பு

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கூடலூரில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத... மேலும் பார்க்க

ஆத்தூா் நகராட்சி பகுதியில் 2 நாள்களுக்கு குடிநீா் நிறுத்தம்

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் ... மேலும் பார்க்க

சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியரின் சடலம் பவானி ஆற்றில் மீட்பு: கைதான 4 பேரிடம் போலீஸாா் விசாரணை

சேலம்: சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சதீஷ்குமாரின் சடலம் பவானி ஆற்றில் திங்கள்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடம் கன்னங்குறிச்சி போலீஸாா் தீவிர விசாரணை மேற... மேலும் பார்க்க

கோவை - தன்பாத், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்கள் இன்று ரத்து

சேலம்: சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - தன்பாத், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 23) ரத்து செய்யப்படுகின்றன.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க