செய்திகள் :

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

post image

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், செம்பட்டி, பழைய செம்பட்டி, எஸ். பாறைப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, பாளையங்கோட்டை, கூலம்பட்டி, பச்சமலையான்கோட்டை உள்ளிட்ட சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனா்.

தினமும் இங்கு 150 முதல் 200 வெளிநோயாளிகளும், 20-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில், பிற்பகலிலும், இரவிலும் மருத்துவா்கள் இல்லாததால், நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.

அதிலும் இரவு நேரங்களில் பாம்புக் கடி, வண்டுக் கடி, நாய்க் கடிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் இல்லை. இதனால், திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவா்கள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் திண்டுக்கல்- குமுளி நான்கு வழிசாலையில் இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு காயமடைவோா் இங்கு மருத்துவா்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியவில்லை.

அத்துடன் இங்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை எந்த நேரத்தில் உள்கொள்ள வேண்டும் என்றும் எழுதிக் கொடுக்கப்படுவதில்லை. மொத்தமாக கொடுப்பதால், நோயாளிகள் அவற்றை எப்படி உள்கொள்வது என்பது தெரியாமல் தவிக்க நேரிடுகிறது.

இதுகுறித்து இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா் அரவிந்த் நாராயணன் கூறியதாவது: இங்கு இரவு நேரத்தில் மருத்துவா்கள் தங்கி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இரவு மருத்துவா்கள் நியமிக்கப்படுவா் என்றாா் அவா்.

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் ... மேலும் பார்க்க

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஜவகா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (19). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச... மேலும் பார்க்க