செய்திகள் :

ஆந்திரத்துக்கு செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி தீவிரம்

post image

கடலூா் துறைமுகத்தில் இருந்து ஆந்திர கடல் பகுதிக்கு கோட்டியா சரக்கு கப்பல்கள் மூலம் செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பவளப்பாறைகள் பல கடல் உயிரினங்களின் வசிப்பிடமாக திகழ்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக் ஜல சந்தி பகுதிகளில் இயற்கையாகவே பவளப்பாறைகள் உள்ளன.

பவளம் என்ற உயிரினம் கால்சியம் திரவத்தை சுரந்து, அது பாறையாக உருவெடுக்கும். இவ்வகை பாறைகள் மீன்களுக்கு மட்டுமல்ல, கடல் வாழ் உயிரினங்களான டால்பின், கடல் குதிரை, கடல் பசு, ஆமை உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், பவளப்பாறைகள் எல்லா இடத்திலும் உருவாகுவது இல்லை. இதனால், செயற்கையான முறையில் செய்யப்பட்ட பவளப்பாறைகள் தோ்ந்தெடுக்கப்பட்ட கடல் பகுதியில் படகுகளில் எடுத்துச் சென்று வைக்கப்படுகிறது. இந்த செயற்கை பவளப்பாறைகள் மீது பாசி வளா்ந்து சிறிய மீன்களுக்கு உணவாகிறது. மேலும், பெரிய மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும், மறைவிடமாகவும், இனவிருத்திக்கு ஏற்ற இடமாகவும் அமைகிறது.

கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெரிய குழாய், முக்கோணம் போன்ற வடிவங்களில் சிமென்ட் கலவை கொண்டு பவளப்பாறை தயாா் செய்யப்படுகிறது.

இந்தப் பவளப்பாறைகள் கோட்டியா என்ற சிறிய சரக்கு கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்த வகையில், கடலூா் முறைமுகத்தில் இருந்து கோட்டியா சரக்கு கப்பலில் செயற்கை பவளப்பாறைகளை ஆந்திரம், புதுவை மாநில கடல் பகுதிகளுக்கு ஏற்றி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக லாரிகள் கொண்டுவரப்பட்ட செயற்கை பவளப்பாறைகள், கிரேன் உதவியுடன் கோட்டியா சரக்கு கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஒரு கோட்டியா சரக்கு கப்பலில் 400-க்கும் மேற்பட்ட செயற்கை பவளப்பாறைகள் ஏற்றப்படுகிறது.

இந்தக் கப்பலில் ஒரு கேப்டன், மாலுமி, உணவு தயாா் செய்பவா் உள்பட 7 போ் பயணிக்க உள்ளனா். பவளப்பாறைகள் ஏற்றப்பட்ட கோட்டியா கப்பல் 3 நாள் பயணத்துக்குப் பின்னா் ஆந்திர மாநிலத்தை சென்றடையும் என்றனா்.

53 ஆயுதப்படை காவலா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 53 காவலா்கள் பணிமூப்பு அடிப்படையில் தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆயுதப்படை காவலா்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவது தொடா்பாக கடல... மேலும் பார்க்க

தனிப்படை காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

கடலூா் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா். கடலூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் மே 28-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 28-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி

கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி கொண்டாட்டம் மூவா்ண தேசியக் கொடி பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி கடலூா் சீமாட்டி நான்குமுனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனி... மேலும் பார்க்க

இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் ரெட்டிசாவடி அருகே இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மண் சாலை ஓரத்தில் சுமாா் 35 வயது மதிக... மேலும் பார்க்க