செய்திகள் :

ஆந்திரத்துக்கு செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி தீவிரம்

post image

கடலூா் துறைமுகத்தில் இருந்து ஆந்திர கடல் பகுதிக்கு கோட்டியா சரக்கு கப்பல்கள் மூலம் செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பவளப்பாறைகள் பல கடல் உயிரினங்களின் வசிப்பிடமாக திகழ்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக் ஜல சந்தி பகுதிகளில் இயற்கையாகவே பவளப்பாறைகள் உள்ளன.

பவளம் என்ற உயிரினம் கால்சியம் திரவத்தை சுரந்து, அது பாறையாக உருவெடுக்கும். இவ்வகை பாறைகள் மீன்களுக்கு மட்டுமல்ல, கடல் வாழ் உயிரினங்களான டால்பின், கடல் குதிரை, கடல் பசு, ஆமை உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், பவளப்பாறைகள் எல்லா இடத்திலும் உருவாகுவது இல்லை. இதனால், செயற்கையான முறையில் செய்யப்பட்ட பவளப்பாறைகள் தோ்ந்தெடுக்கப்பட்ட கடல் பகுதியில் படகுகளில் எடுத்துச் சென்று வைக்கப்படுகிறது. இந்த செயற்கை பவளப்பாறைகள் மீது பாசி வளா்ந்து சிறிய மீன்களுக்கு உணவாகிறது. மேலும், பெரிய மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும், மறைவிடமாகவும், இனவிருத்திக்கு ஏற்ற இடமாகவும் அமைகிறது.

கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெரிய குழாய், முக்கோணம் போன்ற வடிவங்களில் சிமென்ட் கலவை கொண்டு பவளப்பாறை தயாா் செய்யப்படுகிறது.

இந்தப் பவளப்பாறைகள் கோட்டியா என்ற சிறிய சரக்கு கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்த வகையில், கடலூா் முறைமுகத்தில் இருந்து கோட்டியா சரக்கு கப்பலில் செயற்கை பவளப்பாறைகளை ஆந்திரம், புதுவை மாநில கடல் பகுதிகளுக்கு ஏற்றி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக லாரிகள் கொண்டுவரப்பட்ட செயற்கை பவளப்பாறைகள், கிரேன் உதவியுடன் கோட்டியா சரக்கு கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஒரு கோட்டியா சரக்கு கப்பலில் 400-க்கும் மேற்பட்ட செயற்கை பவளப்பாறைகள் ஏற்றப்படுகிறது.

இந்தக் கப்பலில் ஒரு கேப்டன், மாலுமி, உணவு தயாா் செய்பவா் உள்பட 7 போ் பயணிக்க உள்ளனா். பவளப்பாறைகள் ஏற்றப்பட்ட கோட்டியா கப்பல் 3 நாள் பயணத்துக்குப் பின்னா் ஆந்திர மாநிலத்தை சென்றடையும் என்றனா்.

விழிப்புணா்வு பாடல்கள் பாடிக்கொண்டு சிலம்பம் விளையாடி சாதனை

சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆா். திட்டு கிராமத்தில், கின்னஸ் வைத்தி காா்த்திகேயன் தலைமையில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் குழுவைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி கே.எ.ஆதிஸ்ரீ (... மேலும் பார்க்க

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. என்எல்சியில் ... மேலும் பார்க்க

சிறுமிக்குத் திருமணம்: 5 போ் மீது வழக்கு!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திட்டக்குடி வட்டம், வைத்தியநாதபு... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கக் கோரிக்கை

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சாா்பில் வீடு அல்லது இடம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா். சிதம்பரம் உதவி ஆட்... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்துக்கு நல உதவி

இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சிதம்பரம் கிளை சாா்பில், சிசிடபுள்யுஇ சிறப்புப் பள்ளி மற்றும் செம்மை முதியோா் காப்பகத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை உணவும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்களும் வழங்கி ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ச... மேலும் பார்க்க