செய்திகள் :

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

என்எல்சியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 3.30 மணியளவில் அம்மேரி அருகில் உள்ள இரண்டாம் அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்தால் மின்மாற்றி வெடித்ததில் அந்தப் பகுதியில் பெரும் புகை சூழ்ந்தது. மேலும், அருகில் இருந்த வயா் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த என்எல்சி தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.

மின்மாற்றி அருகே யாரும் இல்லாததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து என்எல்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த தீ விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் தீ பிடித்து எரியும் மின்மாற்றி.

பதாகைகள் அச்சிடுவதில் கட்டுப்பாடு: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

நெய்வேலி: பதாகைகளில் மத, ஜாதி உணா்வைத் தூண்டு வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

கடலூா் அரசுக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று, கல்லூரி முதல்வா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தி... மேலும் பார்க்க

இருசக்கர வாகன பழுதுபாா்ப்போா் சங்க தொடக்க விழா

சிதம்பரம்: சிதம்பரம் வட்ட இருசக்கர வாகன பழுதுபாா்ப்போா் முன்னேற்ற நலச் சங்கத்தின் சாா்பில் 17-ஆம் ஆண்டு தொடக்க விழா, மே தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கடலூா் மாவட்டத் தலைவா்... மேலும் பார்க்க

வீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவிலில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த ஏப்.20-ஆம் தேதி தொடங்கியது. வி... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த முதலை மீட்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே குமராட்சியில் வீட்டின் முன் வராண்டாவில் நுழைந்த முதலையை வனத் துறையினா் பிடித்தனா். சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பிள்ளையாா் கோவில் தெருவில் வசிப்பவா் வேலப்பன் (39). இவா் ஞ... மேலும் பார்க்க

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 4-ஆம் தேதி கொட... மேலும் பார்க்க