Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் ...
ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்துக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் விஷாகப்பட்டிணம், அனகப்பள்ளி, அம்பேத்கர் கோனசீமா, காக்கிநாடா, மேற்கு கோதாவரி உள்பட ஏராளமான மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கனமழை மற்றும் புயல் காற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அம்மாநில தலைமைச் செயலாளர் கே விஜயானந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகத்தை மேற்கொள்ள மின் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேவேளையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.” என தலைமைச் செயலாளர் விஜயானந்த் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 200 மி.மீ. அளவில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீதிமன்றம்