ஆந்திரம்: மாவோயிஸ்டு தலைவர்கள் மூவர் சுட்டுக் கொலை!
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் மூத்த மாவோயிஸ்டு தலைவர்கள் மூவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதியில் இந்த நடவடிக்கை நடைபெற்றதாக காவல்துறை உறுதிப்படுத்தியது.
இதுதொடர்பாக அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் எஸ்பியின் அறிக்கையின்படி,
ஆந்திரம்-ஒடிசா எல்லையில் மாவோயிஸ்ட்களின் (ஆந்திரா ஒடிசா எல்லை சிறப்பு மண்டலக் குழு) செயலாளர் உதய், கிழக்கு பிரிவு செயலாளர் அருணா, மற்றொரு தலைவரும் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே கட்சிரோலி காவல்துறை, சிஆர்பிஎஃப் பணியாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கவாண்டே மற்றும் நெல்குண்டாவிலிருந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது, கவாண்டே அருகே இந்திராவதி ஆற்றங்கரை நோக்கி நகர்ந்தது, அந்தப் பகுதியில் பலத்த மழை பெய்த போதிலும், ஆற்றங்கரையில் சுற்றி வளைத்து சோதனை செய்தபோது, மாவோயிஸ்டுகள் சி60 கமாண்டோக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்,
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது. அதைத் தொடர்ந்து நடந்த பகுதியில் நடந்த தேடுதலில் நான்கு மாவோயிஸ்ட் உடல்கள், ஒரு தானியங்கி சுய ஏற்றுதல் துப்பாக்கி, இரண்டு .303 துப்பாக்கிகள் மற்றும் ஒரு பார்மர் ஆகியவை மீட்கப்பட்டன.
கூடுதலாக, அந்த இடத்திலிருந்து வாக்கி-டாக்கிகள், நக்சல் இலக்கியங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மீதமுள்ள மாவோயிஸ்டுகளைக் கண்டறிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.