Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
ஆந்திரா பேருந்து தீ விபத்து: `ஏ.சி. பஸ் என்பதால்’ - கோர விபத்தை விளக்கும் மீட்கப்பட்ட பயணிகள்
தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து ஒன்று கர்னூல் பகுதியில் பைக் மீது மோதியதில் ஏற்பட்ட திடீர் விபத்தால், பேருந்து முழுமையாகத் தீ பற்றி எரிந்துள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 25 பயணிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பேருந்தில் மொத்தம் 40 பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.
A major tragedy occurred early this morning on the Bengaluru–Hyderabad National Highway (NH-44) in Kurnool district.
— Ashish (@KP_Aashish) October 24, 2025
A Volvo bus belonging to Kaleshwaram Travels caught fire and was completely gutted, turning into ashes within minutes. The bus was traveling from Bengaluru to… pic.twitter.com/H1EP29YbRw
பெரும்பாலான பயணிகள் நல்ல தூக்கத்தில் இருந்ததால் தீ பிடித்ததை தாமதமாக கவனித்து தப்பிக்க முயல்வதற்குள் இந்த கோர சம்பவம் நடந்திருக்கிறது. ஏசி பேருந்து என்பதால் பயணிகள் உடனடியாக வெளியே செல்ல முடியவில்லை. தீ விபத்தை உணர்ந்த 20 பயணிகள் ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பியிருக்கின்றனர்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியிலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்டு காயங்களுடன் தப்பிய பயணிகள் பேசுகையில், "ஏசி சிலீப்பர் பஸ் என்பதால் திரைகளைப் போட்டு மூடிக்கொண்டு பயணிகள் எல்லோரும் ஆழ்ந்து படுத்து தூங்கிவிட்டனர். பைக் ஒன்று பஸ் மீது மோதி, பஸுக்கு அடியில் சிக்கிக் கொண்டது. அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் தீ பிடித்து பஸ் எரிய ஆரம்பித்துவிட்டது. தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தாமதமாகத் தான் தீ பிடித்ததை அறிந்து கொண்டனர்.
ஏசி பஸ் என்பதால் ஜன்னல் முழுமையாக மூடப்பட்டிருந்தது. அதனால், ஜன்னல்களை உடைத்து வெளியேறுவதற்குள் உயிரிழப்புகளும், பாதிப்புகள் அதிகமாகிவிட்டன. அவசர வழிக் கதவும் திறக்கமுடியாமல் போனதால் வெளியேற முடியாமல் பெரும் பாதிப்பிற்குள்ளாகிவிட்டோம்" என்று கூறியிருக்கின்றனர்.

















