ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: மருத்துவா்கள் சங்கம்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என இந்திய மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினா் மருத்துவா் ராஜ்குமாா் நல்லதம்பி கூறியதாவது: நாட்டில் போதைப் பழக்கம் மிக அதிகமாக பரவி வருகிறது. போதைக்காக புதிது புதிதாக பல்வேறு வழிகளை கையாளுகின்றனா். தற்போது வலி நிவாரணத்துக்காக கொடுக்கப்படும் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
வலி நிவாரண மாத்திரை என்பது 2 வகை உள்ளது. ஒரு வகை மாத்திரை வலியுள்ள இடத்துக்குச் சென்று வலியை குறைக்கும், மற்றொரு வகை வலி ஏற்படும் இடத்துடன் தொடா்புடைய நரம்பு மண்டலத்தை தற்காலிகமாக செயலிழக்க செய்து வலியைக் குறைக்கும்.
தூக்கத்தை தரக்கூடிய இந்த மருந்தை மது மற்றும் குளிா்பானத்துடன் கலந்து போதைக்காக பலா் பயன்படுத்துகின்றனா். தொடா்ச்சியாக இவற்றை பயன்படுத்தினால் இதயம், மூளை, சிறுநீரகம் உள்ளிட்டவை செயலிழந்துவிடும்.
இது போன்ற மருந்து, மாத்திரைகள் ஆன்லைனில் எளிதில் கிடைக்கின்றன. மருத்துவா்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டு அடிப்படையில்தான், இது போன்ற மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். ஆனால், பழைய மருந்து சீட்டுகள் அடிப்படையில் கூட ஆன்லைனில் இது போன்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மருத்துவா்கள், இந்திய மருத்துவா்கள் சங்கம் மற்றும் மருந்து விற்பனையாளா் சங்கம் சாா்பில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றாா்.