செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் - பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம்!

post image

ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு பதிவுக்காக இன்ஸ்டா பெண் பிரபலம் கைது கொல்கத்தா காவல்துறையினால் செய்யப்பட்டுள்ளார்.

புணேவில் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஷர்மிஸ்தா பனோலி (22) , இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வகுப்புவாத சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இந்தப்பெண் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில் பாலிவுட் நடிகர்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மௌனமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த விடியோவுக்கு எதிர்ப்பு கிளம்பவே அதை நீக்கியும் இருக்கிறார். பின்னர், பலரும் இவரை கடுமையாக கிண்டல் செய்துள்ளனர். கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவதுக்குப் பிறகு ஷர்மிஷ்தா பனோலி, “யாரையும் காயப்படுத்தும் எண்ணத்துடன் நான் இதைக் கூறவில்லை. யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல், எனது பதிவுகளில் கவனமாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

பிரச்னை முடிந்துவிட்டதென இருந்த நிலையில், ஏற்கனவே அவர்மீது கொல்கத்தா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நோட்டீஸை காவல்துறையினர் அந்தப் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுப்ப முயற்சித்துள்ளார்கள். ஆனால், அவர் அந்தக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதாக பெயர் குறிப்பிடாத காவல்துறையினர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னர், நீதிமன்ற உத்தவிரவின்படி ஷர்மிஸ்தா பனோலியை கொல்கத்தா காவல்துறையினர் வெள்ளிக் கிழமை (மே.30) குருகிராமில் வைத்து கைது செய்தனர்.

பஹல்காமில் ஏப்.22இல் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மே.7ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷ் சிந்தூர் மூலமாக பதிலடி கொடுத்தது.

பின்னர், அமெரிக்காவின் தலையீட்டால் இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்.

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க

அருணாசலில் வெள்ளம், நிலச்சரிவு: 11 பேர் பலி, 23 மாவட்டங்கள் பாதிப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: புதியதாக 41 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மேற்கு வங்க மாநிலத்தில் புதியதாக 41 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் சூழலில் நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகர... மேலும் பார்க்க