செய்திகள் :

ஆப்கன் நிலநடுக்கம்: சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! உதவி கோரும் தலிபான் அரசு

post image

ஆப்கானிஸ்தானில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவ வெளிநாடுகள் முன்வர வேண்டும் என்று தலிபான் அரசு கோரிக்கை வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800 பேர் பலியாகினர். 2,500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து போயிருக்கிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளிலிருந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பல கிராமங்கள், மலைப் பகுதியில் அமைந்திருப்பதால், மீட்புப் படையினரை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் கட்டட இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்கள் மிகவும் பிற்போக்குத்தனத்தை பின்பற்றும் சமுதாய மக்களைக் கொண்டது என்பதால், அங்குள்ள கலாசார தடைகளால் பெண்களும் சிறுமிகளும் மருத்துவமனைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் பேர் இருப்பார்கள் என்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயத்துடன் மருத்துவமனைக்கு வரும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பல மருத்துவமனைகள் திணறி வருகின்றன.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தரப்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பல உலக நாடுகளிலிருந்தும் நிவாரண பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன.

குனாா் மற்றும் நாங்கா்ஹாா் மாகாணங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையாக உள்ளது. நாங்கா்ஹாா் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரின் கிழக்கு-வடகிழக்கே 27 கி.மீ. தொலைவில், பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டா் அளவுகோலில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் குனாா் மாகாணத்தில் 610 போ் உயிரிழந்தனா். 1,300 போ் காயமடைந்தனா். பல வீடுகள் சிதைந்தன. நாங்கா்ஹாா் மாகாணத்திலும் ஏராளமானோா் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.

Taliban government appeals for help as search for Afghan earthquake victims intensifies

இதையும் படிக்க... மனித நுரையீரலில் வளர்ந்த பட்டாணிச் செடி!

வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!

பாகிஸ்தானின் வடக்கு மாகாணங்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், மழை வெள்ளம் என்பது கடவுளின் வரம் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியி... மேலும் பார்க்க

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்புக்குத் தடை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமை... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளதாக தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்... மேலும் பார்க்க

மூன்று பாக்கெட் வேகாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி!

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், சமைக்கப்படாத மூன்று பாக்கெட் நூடுல்ஸை சாப்பிட்ட 13 வயது சிறுவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சமைக்கப்படாத நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவனுக்கு சற்று நே... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் தாக்குதல்! பட்டினிச் சாவு 361 ஆக உயர்ந்தது!

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உள்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பெல்ஜியம்! இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடை!

பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ர... மேலும் பார்க்க