செய்திகள் :

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

post image

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இந்திய வம்சாவளி சபீஹ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிளின் தற்போதைய தலைமை இயக்க அதிகாரி ஜெஃப் வில்லியம்ஸ், விரைவில் ஓய்வுபெற இருப்பதால், அவரது பதவிக்கு சபீஹ்கான் நியமிக்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொராதாபாத் நகரைச் சேர்ந்த சபீஹ்கான், 1995 முதல் 30 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளிப்படிப்பில் இந்தியாவிலும், உயர்கல்வி அமெரிக்காவிலும் தொடர்ந்துள்ளார்.

1995-ல் ஆப்பிள் நிறுவனத்தின் கொள்முதல் குழுவில் இணைந்த சபீஹ்கான், நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை வழிநடத்துதல், கொள்முதல், திட்டமிடல், உற்பத்தி, தயாரிப்பு முதலானவற்றை மேற்பார்வையிடும் பணிகளை மேற்கொண்டுள்ளார். தற்போதைய தலைமை இயக்க அதிகாரி ஜெஃப் வில்லியம்ஸின் பதவிக்காலம் முடியும்வரையில், ஆப்பிள் கைக்கடிகார உற்பத்தியை சபீஹ்கான் மேற்பார்வையிடவுள்ளார்.

சமீபத்தில் ஆப்பிள் போன்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதுப்புது மாற்றங்களால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகவும், ஆப்பிள் விற்பனை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தலைமை இயக்க அதிகாரியாக பொறுப்பேற்கும் சபீஹ்கான், ஆப்பிளின் உற்பத்தி மற்றும் நிர்வாகங்களை மேம்படுத்த வேண்டிய கடமையுடன் வழிநடத்தவுள்ளார்.

ஜெஃப் வில்லியம்ஸின் அடிப்படை சம்பளமாக ஒரு மில்லியன் டாலர் வழங்கப்பட்டாலும், பிற கொடுப்பனவுகள் என மொத்த வருவாயாக சுமார் 23 மில்லியன் டாலர் (ரூ. 197 கோடி) வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், முதலில் தலைமை இயக்க அதிகாரியாக இருந்துதான் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஆகையால், சபீஹ்கானும் பதவி உயர்வு பெறலாம் என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

Indian-Origin Sabih Khan Becomes Apple's Chief Operating Officer

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க