செய்திகள் :

ஆமதாபாத்: சிதைந்த நிலையில் பயணிகள்; உறவினர்களிடம் ’டிஎன்ஏ மாதிரி’ கோரும் குஜராத் அரசு!

post image

குஜராத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானம் எரிந்ததில், உள்ளிருந்தவர்கள் உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்த நிலையில் இருப்பதால், அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தனன்ஜெய் திவிவேதி கூறுகையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையால், அவர்களின் உறவினர்கள் டிஎன்ஏ மாதிரியை அளிக்குமாறு வேண்டுகிறோம். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6357373831 மற்றும் 6357373841 என்கிற உதவிமைய எண்களும் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான விபத்தால், அப்பகுதியில் இருந்த சிலரும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடும், காயமடைந்தவர்களின் முழு மருத்துவச் செலவையும் ஏற்பதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க:ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர்!

விமான விபத்து: டிஎன்ஏ சோதனைக்காக காத்திருக்கும் உறவுகள்! கண்ணீருடன்

இந்தியா வந்து லண்டன் திரும்பியவர்களும், லண்டனில் புது வாழ்வைத் தொடங்கச் சென்றவர்களும் விமான விபத்தில் பலியான நிலையில், அவர்களது உறவினர்கள், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்காகக் காத்தி... மேலும் பார்க்க

ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்

ஒட்டுமொத்த நாடே, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், தனது மகள் வந்துவிடுவாள் என நம்பிக்கையோடு இருக்கிறார் விமானப் பணிப்பெண் சைனீதாவின் தாய்.ஏர் இந்த... மேலும் பார்க்க

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க