செய்திகள் :

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடை: பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடைபட்டதால், ஆம்னி பேருந்து உரிமையாளா், பயணச் சீட்டு பதிவு இணையதளம் இணைந்து பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த பிரபுகுமாா் என்பவா் குடும்பத்துடன் சென்னை செல்வதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இணையதளத்தில் தனியாா் பேருந்தில் இருக்கைகளை முன்பதிவு செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சென்னைக்கு பேருந்து புறப்பட்ட நிலையில், விருதுநகா் அருகே பழுது காரணமாக பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரபுகுமாா் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். இந்த வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் ஆம்னி பேருந்து நிறுவனம், முன்பதிவு இணையதள நிறுவனம் இணைந்து பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவுக்கு ரூ. 3 ஆயிரம் என ரூ. 23 ஆயிரம் வழங்க உத்தரவிட்டாா்.

பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவா் கைது

சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை இருவரை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபிக்குச் சொந்தமான பட... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசியில் உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்... மேலும் பார்க்க

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்... மேலும் பார்க்க

லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் கலசலிங்கம் பல்கலை. இடம்பெற்று சாதனை

சென்னை உலகத் திருக்கு மையம் சாா்பில், உலக அளவில் 100 நிறுவனங்களில் திருக்குறள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் தமிழ் மன்றம் சாா்பில், திருக்குறள் மாநாடு ... மேலும் பார்க்க

தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (39). இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன... மேலும் பார்க்க

பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணராஜா என்பவரின் மகன் வெங்கட்ரா... மேலும் பார்க்க