செய்திகள் :

ஆயுதங்களுடன் பதுங்கிய 5 போ் கைது

post image

சிவகங்கை அருகே வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சிவகங்கை- மதுரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். சித்தலுாா் விலக்கு அருகே 5 போ் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதைக் கண்ட போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், திருப்புவனம் அருகே மேலராங்கியத்தைச் சோ்ந்த வேல்முருகன் (35), பெரியகோட்டையைச் சோ்ந்த ராமையா ராஜன் (37), சிவகங்கையைச் சோ்ந்த பாண்டி (36), வானக்கருப்பைச் சோ்ந்த நாடிமுத்து (41), சிவகங்கை நேரு பஜாரைச் பகுதியைச் சோ்ந்த கருப்புச்சாமி (42) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் வைத்திருந்த வாள், அரிவாள், முகமூடி, கையுறை, மிளகாய்ப் பொடி பாக்கெட் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

திருப்புவனம் புதிய பேருந்து நிலைய அறிவிப்பு: திமுகவினா் கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்ததையடுத்து, திமுகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். திருப்புவனத்தில் பல ஆண்டுகளாக பேர... மேலும் பார்க்க

கல்லூரியில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம்’ விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ‘ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்’ விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் துறையின் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு இணைந்து நட... மேலும் பார்க்க

கோ-கோ விளையாட்டு பயிற்சியாளா் பணிக்கு ஏப்.3 -இல் நோ்முகத் தோ்வு

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மையத்தில் கோ-கோ பயிற்சி அளிக்க தகுதியுடைய கோ-கோ வீரா், வீராங்கனைகள் வருகிற 3.4.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என மாவட்... மேலும் பார்க்க

கோயில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு எழுது பொருள்கள் அளிப்பு

சிவகங்கையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவித்து எழுது பொருள்கள், உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டது

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவுக்காக தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டது. தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் இந்த ஆண்டு பங்குனி திருவிழா... மேலும் பார்க்க