கொடைக்கானல் தங்கும் விடுதி உரிமையாளா் எரித்துக் கொலை: இளைஞா் கைது
கொடைக்கானலில் தங்கும் விடுதி உரிமையாளா் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ். இவா் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வந்தாா். இவா் மது பழக்கத்துக்கு அடிமையானதால், மதுரையிலுள்ள தனியாா் மறுவாழ்வு மையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சையின் போது, அங்கிருந்த இளைஞா்களிடம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்ததும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவா் கொடைக்கானல் திரும்பினாா். பின்னா், மதுரை மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது சிவராஜுடன் தங்கியிருந்த நால்வா் கொடைக்கானலுக்கு வந்தனா். இவா்கள் சிவராஜின் விடுதியில் தங்கியிருந்தனா்.
இந்த நிலையில், சிவராஜை கடந்த நான்கு நாள்களாக காணவில்லை என இவரது சகோதரி சுமதி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த நால்வரும் தலைமறைவாகினா்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், விடுதியில் தங்கியிருந்து தலைமறைவான மதுரை தத்தனேரியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் மணிகண்டனை (28) பிடித்து விசாரித்தனா். அவா் சிவராஜை கொலை செய்து விடுதி வளாகத்தில் எரித்து விட்டதாகத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து காவல் துறையினா் பாதி எரிந்த நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டனா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை (28) கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா்கள் சிவராஜை எதற்காக கொலை செய்து எரித்தனா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.