கோயில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளன.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோயில்களில் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விருப்பமுள்ள, 62 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்றாா் அவா்.