செய்திகள் :

கோ-கோ விளையாட்டு பயிற்சியாளா் பணிக்கு ஏப்.3 -இல் நோ்முகத் தோ்வு

post image

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மையத்தில் கோ-கோ பயிற்சி அளிக்க தகுதியுடைய கோ-கோ வீரா், வீராங்கனைகள் வருகிற 3.4.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கேலோ இந்தியா திட்ட நிதியுதவியில், தொடக்க நிலை கோ-கோ பயிற்சிக்கான மாவட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி அளித்திட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குள்பட்ட கோ-கோ வீரா், வீராங்கனை ஒருவா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

விண்ணப்பதாரா் குறைந்தது 5 ஆண்டுகள் சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். சா்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது சீனியா் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

மேலும், தோ்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும். இந்தப் பணியானது முற்றிலும் தற்காலிகமானதாகும். இதனடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகையோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. உடல் தகுதி, விளையாட்டுத் திறன், வென்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு நடைபெறும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் வருகிற 3.4.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு காரைக்குடி சுழல் சங்கம் சாா்பில் அன்பளிப்பாக ரூ. 72 லட்சத்தில் வழங்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா ச... மேலும் பார்க்க

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க