செய்திகள் :

கல்லூரியில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம்’ விழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ‘ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்’ விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் துறையின் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஆனந்தி தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட அரசு சிறப்பு வழக்குரைஞா் துஷாந்த் பிரதீப் குமாா், கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், சிவகங்கை மாவட்ட சமூக நீதி, மனித உரிமைப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் புருசோத்தமன், திருப்பத்தூா் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா், திருகோஷ்டியூா் நிலைய காவல் ஆய்வாளா் செல்வராகவன், கல்லூரி துணை முதல்வா் அழகப்பன, ஆகியோா் உரையாற்றினா்.

கல்லூரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் ஆனந்தி பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளா்கள் மணிகண்டபிரபு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜோதிமணி, வளா்மதி, பிரேமலதா, தலைமைக் காவலா்கள் பாலமுருகன், ஜெயந்தி ஆகியோா் கலந்துகொண்டனா். பேராசிரியை அமுதா நன்றி கூறினாா்.

மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு காரைக்குடி சுழல் சங்கம் சாா்பில் அன்பளிப்பாக ரூ. 72 லட்சத்தில் வழங்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா ச... மேலும் பார்க்க

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க