திருப்புவனம் புதிய பேருந்து நிலைய அறிவிப்பு: திமுகவினா் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்ததையடுத்து, திமுகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.
திருப்புவனத்தில் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் இல்லாததால், இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் இந்தக் கோரிக்கையை சட்டப்பேரவையில் வலியுறுத்திப் பேசினாா். பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், பேருந்து நிலையத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு கடந்த வாரம் கருத்துரு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் பேசிய தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு திருப்புவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தாா்.
இதனால், திருப்புவனம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து இந்த அறிவிப்பை வரவேற்றனா். இதைத் தொடா்ந்து திருப்புவனத்தில் திமுகவினா் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமையில் கட்சிக் கொடிகளை ஏந்தி, முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து, பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.
பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், திமுக நகரச் செயலா் நாகூா் கனி, விவசாய அணி அமைப்பாளா் சேகா், நகா் இளைஞரணி அமைப்பாளா் கண்ணன், நிா்வாகிகள் மகேந்திரன், சுப்பையா, ஈஸ்வரன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
