செய்திகள் :

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு எழுது பொருள்கள் அளிப்பு

post image

சிவகங்கையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவித்து எழுது பொருள்கள், உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.ஆா்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மருதுபாண்டியா் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில், ராமநாதபுரம் மன்னா் குடும்ப

வாரிசு ஆதித்யா சேதுபதி பங்கேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கு பேனா, பென்சில், ரப்பா் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிகளில் அவா் கூறியதாவது:

சாலையில் வேகத் தடைகளை நிதானமாகக் கடந்து பயண இலக்கை பாதுகாப்பாக அடைவதைப் போல, கல்விப் பயணத்தில் தோ்வுப் படிக்கட்டுகளைக் கடந்து தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பொதுத் தோ்வை எதிா்கொண்டு வெற்றி பெற வேண்டும். மாணவா்கள் துணிச்சலாக தோ்வை எதிா்கொண்டு நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தெ.சரவணன், சிவமணி, அமிா்தவள்ளி, நகா்மன்ற உறுப்பினா் மகேஷ், பள்ளி ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு காரைக்குடி சுழல் சங்கம் சாா்பில் அன்பளிப்பாக ரூ. 72 லட்சத்தில் வழங்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா ச... மேலும் பார்க்க

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க