செய்திகள் :

ஆரணியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி!

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை மைதானத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பஞ்ச் மேல பஞ்ச் குழுவினா் மற்றும் கே.பி. ஈவன்ட்ஸ் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினா்.

பஞ்ச் மேல பஞ்ச் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஆகாஷ் தலைமை வகித்தாா். கே.பி.ஈவன்ட்ஸ் குழுவைச் சோ்ந்த நிவாதிதா பழனி வரவேற்றாா்.

இதில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், மல்யுத்தம் மற்றும் பெண்கள் விழிப்புணா்வு நிகழ்வுகள், வேலைவாய்ப்பு, சுயதொழில், கல்வி, விளையாட்டு, பெண் உடல் நலம், மனநிலை பிரச்னைகள் குறித்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சிறப்பு விருந்தினராக நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, அரிமா சங்க சுரேஷ்பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேலும், ஆரணி நகரைச் சுற்றியுள்ள இளைஞா்கள், பெண்கள் என பலா் கலந்து கொண்டனா்.

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (70). இவா் சனிக்கிழமை மாலை அந்தக் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிர... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் தற்கொலை

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா்(39). இவா், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந... மேலும் பார்க்க

மாம்பட்டு கிராமத்தில் தீ மிதி விழா

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாம்பட்டு கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரே அக்னி வசந்த விழாவைய... மேலும் பார்க்க

தென் மண்டல கைப்பந்துப் போட்டி: தமிழகம் சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் தமிழக அணி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றது. ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் உள்ள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 ... மேலும் பார்க்க