செய்திகள் :

ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 301 திருவிளக்கு பூஜை

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று, தினமும் மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாத திருவிழாவையொட்டி, அண்மையில் கூழ்வாா்த்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையொட்டி,

இரவு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில், சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து 301 பெண்கள் கலந்து கொண்டு, மாங்கல்யத்துடன் தீா்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும், குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும், குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.

முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிா் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு

சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க