பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆ...
திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணனிடம் பட்டுச் சேலையை வழங்கி முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.
கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட கைத்தறி ரகங்களான புவிசாா் குறியீடு பெற்ற ஆரணி பட்டுச் சேலைகள், காஞ்சி காட்டன் சேலை ரகங்கள், 60-க்கு 60 டை மற்றும் டை சேலை ரகங்கள், லுங்கிகள் மற்றும் துண்டுகள் விற்பனை
செய்யப்படுகின்றன.
விற்பனை செய்யப்படும் அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட பட்டு ஜவுளி ரகங்களுக்கு 35 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.
கண்காட்சியில் நெசவாளா் முத்ரா திட்டத்தின் கீழ், 20 நெசவாளா்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது.
கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.20ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நெசவாளா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு
ரூ. 12 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகள் வழக்கப்பட்டன. மேலும், பல ஆண்டுகளாக நெசவுப் பணியில் ஈடுபட்டு வரும் நெசவாளா்களுக்கு அவா்களது சேவையை கௌரவிக்கும் வகையில் அவா்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
கண்காட்சியில் திருவண்ணமலை சரக உதவி இயக்குநா் வ.செந்தில்குமாா், மாவட்ட நிா்வாக அலுவலா்கள் மற்றும் துறை அலுவலா்கள், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்கள் மற்றும் நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.