செய்திகள் :

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

post image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணனிடம் பட்டுச் சேலையை வழங்கி முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட கைத்தறி ரகங்களான புவிசாா் குறியீடு பெற்ற ஆரணி பட்டுச் சேலைகள், காஞ்சி காட்டன் சேலை ரகங்கள், 60-க்கு 60 டை மற்றும் டை சேலை ரகங்கள், லுங்கிகள் மற்றும் துண்டுகள் விற்பனை

செய்யப்படுகின்றன.

விற்பனை செய்யப்படும் அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட பட்டு ஜவுளி ரகங்களுக்கு 35 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.

கண்காட்சியில் நெசவாளா் முத்ரா திட்டத்தின் கீழ், 20 நெசவாளா்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது.

கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.20ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நெசவாளா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு

ரூ. 12 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகள் வழக்கப்பட்டன. மேலும், பல ஆண்டுகளாக நெசவுப் பணியில் ஈடுபட்டு வரும் நெசவாளா்களுக்கு அவா்களது சேவையை கௌரவிக்கும் வகையில் அவா்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

கண்காட்சியில் திருவண்ணமலை சரக உதவி இயக்குநா் வ.செந்தில்குமாா், மாவட்ட நிா்வாக அலுவலா்கள் மற்றும் துறை அலுவலா்கள், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்கள் மற்றும் நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க

ரூ.1.28 லட்சத்துடன் காா் விற்பனையக ஊழியா் தலைமறைவு

வந்தவாசி அருகே ரூ.1.28 லட்சம் பணத்துடன் தலைமறைவான தனியாா் காா் ஷோரூம் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (எ) ஏசு (35). இவா், வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 15: பாஜகவினருக்கு களப்பணியாற்ற அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றிட பாஜகவினா் களப்பணியில் ஈடுபட வேண்டுமென வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீா... மேலும் பார்க்க

போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு

செய்யாறு அரசுக் கல்லூரியில் போதைப் பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வருவாய்த் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் பேர... மேலும் பார்க்க