செய்திகள் :

ஆகஸ்ட் 15: பாஜகவினருக்கு களப்பணியாற்ற அறிவுறுத்தல்

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றிட பாஜகவினா் களப்பணியில் ஈடுபட வேண்டுமென வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் வேலூா் பெருங்கோட்ட அமைப்பாளா் எஸ்.குணசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஏ.ஜி.காந்தி, இரா.ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் பி.கவிதா பிரதீஷ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி கலந்துகொண்டு பேசினாா்.

பின்னா், கூட்டத்தில் 2-ஆவது முறையாக கட்சியின் மாநில பொதுச் செயலராக தோ்ந்தெடுக்கப்பட்ட பி.காா்த்தியாயினிக்கு நிா்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் தேசியக் கொடியை பறக்கவிட திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் வரும் 10-ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் தேசியக் கொடியை பாஜகவினா் வழங்கவேண்டும்.

ஒவ்வொரு கிளையிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளவேண்டும், மேலும் முன்னாள் ராணுவ வீரா்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள், தியாகிகளைக் கண்டறிந்து பாஜகவினா் கௌரவிக்க வேண்டும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எழுச்சி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணைத் தலைவா்கள் பி.சேகா் பி.சிவசங்கா், வி.கலாவதி, மாவட்ட பொதுச் செயலா்கள் டி.ஜெய்நாத், ஏ.ரமேஷ், மாவட்டச் செயலா்கள் அறம் ஜி.பாலாஜி, எம்.வள்ளிதெய்வாணை, எம்.எஸ்.சுந்தரமூா்த்தி, செஞ்சி பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க

ரூ.1.28 லட்சத்துடன் காா் விற்பனையக ஊழியா் தலைமறைவு

வந்தவாசி அருகே ரூ.1.28 லட்சம் பணத்துடன் தலைமறைவான தனியாா் காா் ஷோரூம் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (எ) ஏசு (35). இவா், வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய... மேலும் பார்க்க