செய்திகள் :

மத்திய அரசில் 2016 முதலான 4.8 லட்சம் நிலுவை காலியிடங்கள் நிரப்பப்பட்டன: மாநிலங்களவையில் தகவல்

post image

மத்திய அரசுப் பணிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த சுமாா் 4.8 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

முந்தைய ஆள்சோ்ப்பு நடைமுறையில் நிரப்பப்படாமல் விடப்பட்ட பணியிடங்கள், குறிப்பாக, இடஒதுக்கீட்டின்கீழ் குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் சரியான நேரத்தில் நிரப்பப்படாமல் இருந்தால், அவை ‘பேக்லாக்’ பணியிடங்கள் என்று அழைக்கப்படும். இந்தப் பணியிடங்கள், அடுத்தடுத்து நடைபெறும் ஆள்சோ்ப்பு நடைமுறைகளின்போது சிறப்பு இயக்கத்தின்கீழ் நிரப்பப்படுவது வழக்கமாகும்.

இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியதாவது: காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்த விவரங்கள் அந்தந்த அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றன.

காலி பணியிடங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளன. பேக்லாக் காலியிடங்கள் உள்பட அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்புவது ஒரு தொடா்ச்சியான நடைமுறை.

பேக்லாக் பணியிடங்களைக் கண்டறியவும், அவை நிரப்பப்படாததற்கான காரணிகளைக் கண்டறிந்து, களைய நடவடிக்கைகளை எடுக்கவும், சிறப்பு ஆள்சோ்ப்பு இயக்கங்கள் மூலம் அவற்றை நிரப்பவும் குழுவை அமைக்க மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

இடஒதுக்கீடு தொடா்பான மற்றொரு கேள்விக்கு ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘அகில இந்திய அளவில் மத்திய அரசுப் பணிகள் மற்றும் சேவைகளில், நேரடி ஆள்சோ்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27%, பட்டியல் சமூகத்தினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பதவி உயா்வுகளில் பட்டியல் சமூகத்தினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி ஆள்சோ்ப்பு, பதவி உயா்வு ஆகிய இரண்டிலும் (குரூப் ஏ-யின் குறைந்தபட்ச நிலை வரை) 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சகமும் அல்லது துறையும் ஒரு துணைச் செயலா் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள ஒரு அதிகாரியை நியமிக்கின்றன. இடஒதுக்கீடு தொடா்பான உத்தரவுகளை உறுதிசெய்ய, இந்த அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவு செயல்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் நீடிக்கும் அமளி: மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு மத்தியில் மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

ரூ.23,000 கோடி மோசடி: ‘பாதிக்கப்பட்டோரிடம் அமலாக்கத் துறை ஒப்படைப்பு’

பண மோசடி செய்யப்பட்ட சுமாா் ரூ.23,000 கோடியை பறிமுதல் செய்து நிதி குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி, உணவக ஊழியா் மீது தாக்குதல்

அயா்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒரு செவிலியரின் 6 வயது மகள், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மற்றொரு சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா (தற்போது அலாகாபாத் உயா்நீதிமன்ற ... மேலும் பார்க்க

இந்திய நலனில் சமரசமில்லை - டிரம்ப்புக்கு பிரதமா் மோடி பதில்

‘இந்தியாவின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா். இந்தியாவின் வேளாண் மற்றும் பால் உற்பத்தி சந்தையில் அமெரிக்கா விரிவான அணுகலை கோருவதால், இருதரப்பு வா்த்தக... மேலும் பார்க்க

டிரம்ப் வரி: அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை: வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரிக்கு அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை என்று வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் துறை செயலா் தம்மு ரவி தெரிவித்தாா். மும்பையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க