செய்திகள் :

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வன்(32), அரசுப் பேருந்து நடத்துநா்.

இவா், வழக்கம் போல வியாழக்கிழமை மாலை செய்யாற்றில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் பணியில் இருந்தாா்.

மாங்கால் கூட்டுச்சாலை அருகே பேருந்து சென்றபோது, அங்கிருந்த இருவா் ஓடி வந்து, ஓடும் பேருந்தில் ஏறியுள்ளனா். இதைக் கண்ட நடத்துநா் வெற்றிச்செல்வன், ஓடும் பேருந்தில் ஏறுகிறீா்களே, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன ஆவது எனக் கேட்டதாகத் தெரிகிறது.

அதற்கு அவா்கள் நாங்கள் ஓடிவருவதைப் பாா்த்து பேருந்தை நிறுத்தியிருக்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்துநரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

அப்போது பேருந்தில் பயணித்த சக பயணிகள் சமாதானப்படுத்தினா்.

இந்த நிலையில் உடனே தகராறு செய்த இருவரையும் பேருந்து ஊழியா்கள் பிடித்து தூசி போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்டது செய்யாறு வட்டம், இரும்பந்தயாங்கல் கிராமத்தைச் சோ்ந்த அமித்பாஷா (35), செய்யாறு காமராஜா் நகரைச் சோ்ந்த காதா்பாஷா(50) எனத் தெரிய வந்து, அவா்களை கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க

ரூ.1.28 லட்சத்துடன் காா் விற்பனையக ஊழியா் தலைமறைவு

வந்தவாசி அருகே ரூ.1.28 லட்சம் பணத்துடன் தலைமறைவான தனியாா் காா் ஷோரூம் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (எ) ஏசு (35). இவா், வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க